உள்ளூர் செய்திகள்

பைக் மோதி வடமாநில வாலிபர் சாவு

Published On 2023-06-01 09:26 GMT   |   Update On 2023-06-01 09:26 GMT
  • நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதியது
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

மத்திய பிரதேசம் மாநிலம், சி.ப. மாவட்டம் பஜ்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக்சிங் (வயது 28). இவர் வெம்பாக்கம் அடுத்த திருப்பனமூர் கிராமத்தில் உள்ள தனியார் ஜல்லி அரவை கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரும், இவருடன் வேலை செய்யும் ஓம்பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் நேற்று வெம்பாக்கம் பகுதிக்கு பைக்கில் வந்தனர். அங்கிருந்து மீண்டும் திருப்பனமூருக்கு சென்றனர்.

அப்போது பைக் நிலைத்தடுமாறி சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தீபக்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த ஓம்பிரகாஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீபக்சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News