உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் இளைஞர் தினத்தை முன்னிட்டு மாரத்தான் போட்டி
- முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்
- ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டி அண்ணா நுழைவு வாயில் வழியாக கிரிவலப்பா தையில் உள்ள அபய மண்டபத்தில் நிறைவு பெற்றது.
5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மாரத்தான் போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் பரிசாக, ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க ப்பட்டது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என 3 பிரிவாக இந்த பரிசுகள் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசாக 7 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்ப ட்டது.
அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.