உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற சுகாதார நல மையம் திறப்பு
- ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஆரணி:
ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நகர்ப்புற சுகாதார நல மையத்தை தமிழக முதல்-அமைச்சர் வீடியோ காணொளி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் ஆகியோர் சுகாதாரமைய கட்டடத்தை தொடங்கி ைவத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மோகன், கண்ணமங்கலம் டவுன் செயலாளர் கோவர்த்தனன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஞ்சித். நகரப் பொருளாளர் அக்பர், மாவட்ட பிரதிநிதி பாலமுருகன், மருத்துவர் ஹேம்நாத், நகர மன்ற உறுப்பினர்கள் விநாயகம், இஸ்ரத்ஜபின் அப்சல், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் செந்தில்வேல், நகர ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.