உள்ளூர் செய்திகள்

அரிசி, பருப்பு பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை

Published On 2023-10-04 08:19 GMT   |   Update On 2023-10-04 08:19 GMT
  • ரேசன் கடை விற்பனையாளர் சஸ்பெண்டு
  • அதிகாரி நடவடிக்கை

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டு அடுத்த தென் கரும்பலூர் 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.

இதன் கட்டுப்பாட்டில் அதே கிராமத்தில் கூட்டுறவு பொது விநியோகத் திட்டம் மூலம் ரேசன் கடை இயங்கி வருகிறது.

இந்த கடையில் விற்பனையாளராக செங்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 48) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த மாதம் பொதுமக்களுக்கு அரிசி பருப்பு சரியான முறையில் போடவில்லை என்று மாவட்ட கூட்டுறவு சார் பதிவாளர் மணிவண்ணனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

அதன் அடிப்படையில் வங்கி செயலாளர் அண்ணா மலை விசாரணை செய்தார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய 2,500 கிலோ அரிசி, 100 கிலோ பருப்பு ஆகியவை பொதுமக் களுக்கு வழங்காமல் அவர் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளருக்கு கடிதம் எழுதினார்.

அதன் அடிப்படையில் பொது மக்களுக்கு அரிசி பருப்பு வழங்காமல் விற்பனை செய்த சுரேஷ் குமாரை கடந்த 30-ந் தேதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட கூட்டுறவு சார்பதிவாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News