உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் புதிய வழித்தடம்

Published On 2023-07-09 13:59 IST   |   Update On 2023-07-09 13:59:00 IST
  • மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் தொடங்கி வைத்தார்
  • 30 ஆண்டுகளுக்கு பின்பு இயக்கப்படுகிறது

ஆரணி:

ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பின்பு ஆரணி-படவேடு வழி தடத்தில் செல்லும் பஸ்கள் நின்று செல்ல தொடக்க விழா நடைபெற்றது.

மேலும் தற்போது கோரிக்கையை ஏற்று போக்குவரத்து துறை சார்பில் 1பி அரசு பஸ் புதிய வழித்தடத்தை தொடங்கும் நிகழ்வு மாவட்ட தொழில்நுட்ப துணை மேலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் துரை.மாமது, மோகன், மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட தொழிலாளி அணி துணை அமைப்பாளர் பிடிசி உதயசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர், நிர்வாகிகள் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News