உள்ளூர் செய்திகள்

போலி டாக்டர் கைது

Published On 2023-06-13 15:29 IST   |   Update On 2023-06-13 15:29:00 IST
  • மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தார்
  • போலீசார் விசாரணை

வெம்பாக்கம்:

தூசி அடுத்த கூழமந்தலை சேர்ந்தவர் மரிய அமல ராஜன் (வயது 46). இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாண்டியன், தூசி போலீஸ் நிலையத்தில் மருத்துவம் படிக்காமலேயே மரிய அமல ராஜன் பொது மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மரிய அமல ராஜன் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் கிளினிக்கில் உள்ள மருத்துவ கருவிகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மரிய அமலராஜன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News