உள்ளூர் செய்திகள்

துப்புரவு பணிகளுக்காக மின்சார ஆட்டோக்கள்

Published On 2023-07-06 13:45 IST   |   Update On 2023-07-06 13:45:00 IST
  • எம்.எல்.ஏ. வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செங்கம்:

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு கிராம பஞ்சாயத்துகளில் துப்புரவு பணிக்காக மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடத்த இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

29 கிராம பஞ்சாயத்துகளுக்கு 37 மின்சார ஆட்டோக்கள் துப்புரவு பணிகளுக்காக வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு மின்சார ஆட்டோக்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபு, நிர்மலா, ஒன்றிய கவுன்சிலர் பொன்னி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News