உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவியை திருமணம் செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல்

Published On 2023-08-08 09:32 GMT   |   Update On 2023-08-08 09:32 GMT
  • வாலிபர் போக்சோவில் கைது
  • 3 வருடங்களாக காதலித்து வந்தார்

செய்யாறு:

செய்யாறு பகுதியை சேர்ந்தவர் 17 வயதுடைய இளம்பெண். இவர் ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் ஜீவா (20). இவர் செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் சிப்காட்டில் வேலை செய்து வருகிறார். ஜீவா கல்லூரி மாணவியை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜீவா வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாணவி கடைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஜீவா மாணவியை ஆபாசமாக பேசி தன்னை திருமணம் செய்யவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.

இச்சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் போக்சோவில் வழக்கு பதிவு செய்தார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் நேற்று ஜீவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News