உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி கலை போட்டிகள்

Published On 2023-11-10 08:18 GMT   |   Update On 2023-11-10 08:18 GMT
  • பண்பாட்டுத்துறை சார்பில் நடக்கிறது
  • கலெக்டர் தகவல்

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் போட்டிகள் நடைபெறும் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மாவட்ட அரசு இசைப்ப ள்ளியில் நடைபெற உள்ளது. குரலிசை, கருவி இசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

17 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொள்ளலாம். மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

கலைப் போட்டிகள் குறித்து கூடுதல் விவரங்களை பெற 044-27269148, 86673 99314 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News