உள்ளூர் செய்திகள்

ஜமுனாமரத்தூர் மலைப்பகுதியில் சாராய ஒழிப்பு நடவடிக்கை

Published On 2023-06-04 13:32 IST   |   Update On 2023-06-04 13:32:00 IST
  • போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது
  • போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்

திருவண்ணாமலை:

விழுப்புரம் மாவட்டம் மரக் காணம் பகுதியில் கள்ளச்சா ராயம் குடித்து பலர் உயிரி ழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவ தும் சாராய ஒழிப்பு நடவ டிக்கை தீவிரமாகமேற்கொள் ளப்பட்டு வருகிறது.

அதன் படி, திருவண்ணாமலை மாவட்டத்திலும் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவி ரம் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று திரு வண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண் டுகள் ரமேஷ்ராஜ், கோவிந்த சாமி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் ஜமு னாமரத்தூர் மலைப்பகுதி யில் உள்ள தும்பக்காடு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாராய ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்ட னர்.

அப்போது ஜமுனாமரத் தூர் தாலுகா தும்பக்காடு கீழூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு (வயது 33), தும்பக்காடு மேலூர் கிராமத்தை சேர்ந்த முரளி (22) ஆகியோர் அவர்க ளது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த போது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News