உள்ளூர் செய்திகள்

பிரியாணி மாஸ்டருக்கு கத்தி குத்து

Published On 2023-06-22 09:09 GMT   |   Update On 2023-06-22 09:09 GMT
  • லாரி டிரைவர் கைது
  • முன் விரோதம் காரணமாக விபரீதம்

செய்யாறு:

செய்யாறு அடுத்த பிரம்ம தேசத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). பிரியாணி மாஸ்டர். இவரது மனைவி மாயாதேவி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (28).லாரி டிரைவர். இவருக்கும் பெருமாளுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. பெருமாளின் மனைவி பிரிந்து சென்றதற்கு வீராசாமி தான் காரணம் என்று கூறி இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வீராசாமி பஜார் வீதியில் நின்றிருந்த பெருமாளிடம் சென்று தகராறில் ஈடுபட்டார். பின்னர் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த வீராசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை சரமாரியாக குத்தினார். இதனால் பஜார் வீதியில் நின்று இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பெருமாளை அங்கிரு ந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார்.

மேலும் வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News