உள்ளூர் செய்திகள்

மகளை மிரட்டுவதற்காக தீக்குளிப்பது போன்று மிரட்டிய தாய் மீது தீப்பிடித்தது

Published On 2023-06-23 14:49 IST   |   Update On 2023-06-23 14:49:00 IST
  • தடுக்கச் சென்ற மகளுக்கும் தீக்காயம்
  • திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை வ.உ.சி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மோகன்,கூலித் தொழிலாளி.இவரது மனைவி புஷ்பா(வயது 40)

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.இருவரும் பட்டப் படிப்பு படித்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை புஷ்பாவும் அவரது மகள் லட்சுமியும் (25) வீட்டில் இருந்தனர். அப்போது லட்சுமியை வீட்டு வேலை செய்யும்படி அவரது தாய் கூறியதாக தெரிகிறது.இதனால் தாய்க்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மகளை மிரட்டுவதற்காக புஷ்பா வீட்டில் சிறிய கேனில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிப்பது போல மிரட்டி உள்ளார்.

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடலில் தீப்பிடித்து உள்ளது.இதனால் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி தாயின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றார்.இதனால் அவரது கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது.

தாய்,மகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News