உள்ளூர் செய்திகள்

கார் மோதி பெண்கள் உட்பட 3 பேர் படுகாயம்

Published On 2023-09-11 09:50 GMT   |   Update On 2023-09-11 09:51 GMT
  • பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

செங்கம்:

செங்கம் அடுத்த ரோடுகரியமங்கலம் சேர்ந்தவர்கள் பரிதா (வயது 37), சின்னபாப்பா(55), ஜெயமணி (38). இவர்கள் அதே பகுதியில் உள்ள பகுதியில் இன்று காலை பால் ஊற்றுவதற்காக சாலை ஓரம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக பால் ஊற்ற வந்த 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக பரிதா மற்றும் ஜெயமணி ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News