உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது...அ.தி.மு.க. கூட்டணி சிதறி விட்டது- திருமாவளவன்

Published On 2022-11-27 20:18 GMT   |   Update On 2022-11-27 20:18 GMT
  • தமிழகத்தில் 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்க முயற்சி எடுக்கிறது.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டியில் கட்சி கொடியை ஏற்றி வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஐ.நா.பேரவையும், சர்வதேச சமூகமும் ஈழத்தமிழர்களின் துயரை துடைக்க முன்வர வேண்டும். முள்ளிவாய்க்கால் இன படுகொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும். தமிழகத்தில்அ.தி.மு.க.வை தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு வர பா.ஜ.க. பகிரங்கமாக முயற்சி எடுக்கிறது.

தமிழ்நாடு சமூகநீதிக்கான மண். இங்கு சனாதனத்துக்கு இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என தொடர்ந்து தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் இல்லை. அது தேர்தலுடன் கலைந்து சிதறிவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் ஏற்புடையது அல்ல. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ஜனநாயகத்துக்கும் எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News