உள்ளூர் செய்திகள்

வில்-அம்பு சின்னம் இருக்கும் அணியுடன் தொடர்ந்து பயணிப்போம் -சிவசேனா இளைஞர் அணி தலைவர் திருமுருக தினேஷ் அறிவிப்பு

Published On 2023-02-20 07:59 GMT   |   Update On 2023-02-20 07:59 GMT
  • உத்தவ் தாக்கரே அணியினர் சிவசேனா கட்சி சின்னத்தை இழந்துள்ளனர்.
  • கட்சியின் நிர்வாகிகளும் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

திருப்பூர் :

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன் மூலம் உத்தவ் தாக்கரே அணியினர் சிவசேனா கட்சி சின்னத்தை இழந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக சிவசேனா கட்சியினர் வில் -அம்பு சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு தொடர்ந்து பயணிப்போம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக சிவசேனா கட்சியின் இளைஞர் அணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக சிவசேனா கட்சியினரை பொறுத்தவரைக்கும் வில் அம்பு சின்னம் எங்கு உள்ளதோ அந்த இடத்தில் ஒருங்கிணைந்து நாங்கள் பயணிப்போம். கட்சியின் நிர்வாகிகளும் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News