உள்ளூர் செய்திகள்

தடுப்புச்சுவர் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள மலைச்சாலை.

பெரும்பாறை அருகே மலைச்சாலையில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2023-04-29 12:53 IST   |   Update On 2023-04-29 12:53:00 IST
இந்த மலைப்பாதை யில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளியில் இருந்து சோலைக்காடு வரையிலான மலைப்பாதை யில் தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது புல்லா வெளி-சோலைக்காடு இடையே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சாலையில் சில இடங்களில் இன்னும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட வில்லை. இந்த சாலையோரம் 200 அடி அபாய பள்ள த்தாக்கு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த மலைப்பாதை யில் தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News