உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் வடமாநில கொள்ளையன். 

திண்டிவனத்தில் பரபரப்பு வடமாநில கொள்ளை கும்பல் பஸ்சில் கைவரிசை பொது மக்கள் மடக்கி தர்ம அடி

Published On 2022-08-25 09:24 GMT   |   Update On 2022-08-25 09:24 GMT
2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.

விழுப்புரம்:

தூத்துக்குடி மாவட்ட த்தை சேர்ந்தவர் மேரி (வயது 30) இவர் சென்னை கே.கே. நகரில் தங்கி அதே பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று இரவு மேரி தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனியார் பஸ்சில் சென்றார். அப்போது திண்டிவனம் அருகே சலவாதி பகுதியில் பஸ் வந்தபோது இரவு சாப்பிடுவதற்காக பஸ்சை சலவாதியில் அருகே உள்ள ஒரு ஓட்டலில் பஸ் டிரைவர் நிறுத்தினார்.

அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி ஓட்டலுக்கு சென்ற போது கடைசியாக மேரி இறங்கினார். திடீரென்று ஒரு காரில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்களில் 2 பேர் வேகமாக பஸ்சில் ஏறி மேரியின் கைப்பையை கத்தியால் அறுத்து பையில் இருந்த 5 ஆயிரம் ரொக்க பணத்தை பறித்தனர்.இதைப் பார்த்த மேரி அதிர்ச்சி அைடந்து திருடன் திருடன் என கத்தினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த 2 பேரில் ஒருவன் தப்பி ஓடி விட்டான். மற்றொருவன் மேரியை தாக்கி விட்டு தப்பிஓட முயன்ற போது பொதுமக்கள் அவனை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல்அறிந்த திண்டி வனம்போலீஸ் ஏ.எஸ்பி.அபிஷேக்குப்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டி வனம் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள்மத்திய பிரதே சம்மனவர் தாலுகா கர்வா பகுதியை சேர்ந்த விவேர்கான் (வயது 29) இவனது கூட்டாளி களும் அதே பகுதியை சேர்ந்த வர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் தப்பியோடிய 4 மற்றும் இவர்கள் வேறுஎங்கேயாவது கொலை, கொள்ளையில் ஈடுபட்டனரா? என்பது குறித்துபோலீசார் கிடுக்கிப்பிடிவிசாரணை செய்துள்ளனர்.

Tags:    

Similar News