உள்ளூர் செய்திகள்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாயம் கரையோர கிராம மக்கள் குளிக்க தடை

Published On 2022-08-11 07:05 GMT   |   Update On 2022-08-11 07:05 GMT
  • அணையிலிருந்து 3000 கன அடி உபரி நீர் நிரம்பியதால் அணையிலிருந்து நீர் கடந்த 5-ந்தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது.
  • தவறான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

விழுப்புரம்:

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து 3000 கன அடி உபரி நீர் நிரம்பியதால் அணையிலிருந்து நீர் கடந்த 5-ந்தேதி முதல் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம், திருவெண்ணைநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆற்றின் வழியாக செல்கிறது.

மேற்படி தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிபெருக்கி மூலம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிப்பது, பள்ளி மாணவ- மாணவிகள் செல்பி எடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்ற தவறான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடுவோர்களை இதுேபான்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். 

Tags:    

Similar News