உள்ளூர் செய்திகள்

அரசு நடுநிலைப்பள்ளி அருகே தேங்கி கிடக்கும் சாக்கடை.

அரசு பள்ளி அருகே தேங்கியுள்ள கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்

Published On 2022-10-31 09:38 GMT   |   Update On 2022-10-31 09:38 GMT
  • சாக்கடை கால்வாயை பல மாதங்களாக சீர் செய்யப்படாத நிலையில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
  • இதனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாகி வருகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள பரையப்பட்டி புதூரில்அரசு நடுநிலைப்ப ள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கு அருகில் ரோட்டோரத்தில் உள்ள சாக்கடை கால்வாயை பல மாதங்களாக சீர் செய்யப்படாத நிலையில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனால் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாகி வருகிறது.இதனை முறையாக சரி செய்ய சாக்கடை கால்வாய்கள் அமைக்க வேண்டும் எனவும், உடனடி யாக இதனை சரி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News