களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்த போது எடுத்த படம்.
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா
- சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் ஆகியோர் வாகனத்தில் எழுந்தருளி தெப்பக் குளத்திற்கு வந்தனர்
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காட்டில் ஆண்டு தோறும் தை மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கோலா கலத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று ஸ்ரீசத்திய வாகீஸ்வரர், கோமதி அம்பாள் கோவில் தெப்ப உற்சவம் நடை பெற்றது.
இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் ஆகியோர் கோவிலில் இருந்து வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகள் வழியாக விழா நடைபெறும் தெப்பக் குளத்திற்கு வந்தனர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷே கங்களும், அலங் கார தீபாரா தனைகளும் நடத்தப்பட்டது.அதன் பின்னர் தெப்ப உற்சவம் தொடங்கியது. சிறப்பு அலங்காரத்தில் சத்தியவாகீஸ்வரரும், கோமதி அம்பாளும் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வந்து காட்சி அளித்தனர்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி தெப்பமும், தெப்பக்குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபமும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலித்தது. 2-ம் நாளான இன்று இரவு களக்காடு வரதராஜ பெருமாள் கோவில் தெப்ப திருவிழாவும், 3-ம் நாளான நாளை (12-ந் தேதி) களக்காடு சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவில் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.