உள்ளூர் செய்திகள்

தெப்ப உற்சவம் நடைபெற்றபோது எடுத்த படம்.

தாரமங்கலம் அருகே மார்கழி ஏகாதசியை முன்னிட்டு தெப்ப தேர்த்திருவிழா

Published On 2023-01-04 14:56 IST   |   Update On 2023-01-04 14:56:00 IST
  • ஏரியில் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் மற்றும் வேட்ராயப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.
  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வேட்றாய பெருமாள் சோரகை மலையில் புஷ்ப பல்லக்கில் கண்காணிப்பட்டி கோவில் வீட்டில் இருந்து மலைப்பகுதியில் எடுத்து சென்று அங்கு சிறப்பு அபிஷேகம், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள மானத்தால் ஊராட்சிக்கு உட்பட்ட மானத்தால் ஏரியில் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற சென்றாய பெருமாள் மற்றும் வேட்ராயப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.

இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வேட்றாய பெருமாள் சோரகை மலையில் புஷ்ப பல்லக்கில் கண்காணிப்பட்டி கோவில் வீட்டில் இருந்து மலைப்பகுதியில் எடுத்து சென்று அங்கு சிறப்பு அபிஷேகம், சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பின்னர் மறுநாள் காலை கண்காணிபட்டி கோவில் வீட்டில் சாமி சிறப்பொஉ அலங்காரத்தில் அழைத்து வரப்பட்டார். இதை தொடர்ந்து துவாதசி அன்று தெப்ப தேர்த்திருவிழா மாலையில் நடைபெற்றது.

Tags:    

Similar News