உள்ளூர் செய்திகள்

லாரி பேட்டரிகள் திருட்டு

Published On 2023-05-26 09:49 GMT   |   Update On 2023-05-26 09:49 GMT
  • லோடுடன் வருகை தந்த லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.
  • 3 லாரிகளில் இருந்து 6 பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டை பகுதியில் நெல் அரவை மில் உள்ளது.

இந்த மில்லில் அரைப்பதற்காக லோடுடன் வருகை தந்த லாரிகள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தன.

அவ்வாறு நிறுத்தப்பட்டி ருந்த மூன்று லாரிகளில் இருந்து தலா இரண்டு பேட்டரிகள் வீதம் ஆறு பேட்டரிகள் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்து பட்டுக்கோட்டை பகுதியின் லாரி உரிமையாளர் சங்க தலைவர் போஜராஜன், நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரிகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News