உள்ளூர் செய்திகள்
null

டீ போட கியாஸ் அடுப்பை திறந்த பெண் தீயில் கருகி பலி

Published On 2022-06-24 10:00 GMT   |   Update On 2022-06-24 10:01 GMT
  • டீ வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது.
  • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு ஆர்.என்.புதூர் அடுத்த பெருமாள்மலை, ராஜீவ் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மனைவி நாகராணி (45). மூர்த்தி டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை நாகராணி டீ வைப்பதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது. இதனால் வேதனையில் அவர் அலறினார்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் நாகராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை முடிந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நாகராணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News