உள்ளூர் செய்திகள்

வாலிபர் பரிதாப சாவு

Published On 2022-10-21 09:41 GMT   |   Update On 2022-10-21 09:41 GMT
  • தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
  • அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சேலம்:

சேலம் அயோத்தியா பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் அடுத்த முட்டை கடை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (வயது 22). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எருமாபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியி லேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து கிச்சிப்பா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News