உள்ளூர் செய்திகள்

ஓடைகுறிஞ்சி மலர்கள் குறித்து மாணவிகள் ஆய்வு செய்தனர்.

கொடைக்கானல் ஓடைக்குறிஞ்சி மலர்களை ஆய்வு செய்த மாணவிகள்

Published On 2022-11-26 11:20 IST   |   Update On 2022-11-26 11:20:00 IST
  • கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பல்வேறு பகுதிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு பூத்துக் குலுங்கியது.
  • ஓடைக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் செடிகள் உள்ளிட்டவை களை சேகரித்துக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் போவதாகவும் தெரிவித்து ள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பல்வேறு பகுதிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு பூத்துக் குலுங்கியது. இதனை த்தொடர்ந்து 2030ம் ஆண்டு பூக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிஞ்சிப் பூக்களில் பல்வேறு வகை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் 30 வகையிலான குறிஞ்சி மலர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஓடைக்குறிஞ்சி எனப்படும் வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் இந்த வகை பூக்கள் பல்வேறு ஓடைகளுக்கு அருகே பூத்துக் குலுங்கி வருகிறது. இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை யும் விடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மற்றும் தோட்டக்கலை துறையினர் இணைந்து ஓடைக்குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள பகுதிகளில் செடிகள் உள்ளிட்டவை களை சேகரித்துக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தப் போவதாகவும் தெரிவித்து ள்ளனர். இந்த அரியவகை பூக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News