உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

ஆண்டிபட்டியில் குடிபோதையில் தவறி விழுந்த காவலாளி பலி

Published On 2023-11-02 05:49 GMT   |   Update On 2023-11-02 05:49 GMT
  • யூனியன் அலுவலக காவலாளி குடிபோதையில் தவறிவிழுந்து இறந்தார்.
  • மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே கீழமஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன்(30). இவருக்கு திருமணமாக வில்லை. ஆண்டிபட்டி யூனியன் அலுவலகத்தில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்ப வத்தன்று இரவு பணிக்கு முருகன் வந்துள்ளார்.

அங்கு சேர்மன் அலுவல கம் முன்பு குடிபோதையில் தவறிவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுநாள் காலை அலுவலக ஊழியர்கள் வந்து பார்த்த போது முருகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆண்டிபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News