உள்ளூர் செய்திகள்

குண்டும், குழியுமான உள்ள சாலையால் பொதுமக்கள் அவதி

Published On 2023-12-02 10:09 GMT   |   Update On 2023-12-02 10:09 GMT
  • கிருஷ்ணகிரி அருகே குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
  • கிராம மக்கள் பலமுறை புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊரா ட்சிக்குட்ப ட்ட பட்டக்கா னூர், அம்பேத்கர்நகர், புதுக்காடு ஆகிய கிராம த்திற்கு செல்லும் தார் சாலை, ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பல ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து போக்கு வரத்துக்கு இடையூ றான நிலையில் உள்ளது.

இதில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.மேலும் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் மரு த்துவமனைக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்வது பெரும் சவாலாக உள்ளது.

சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடி க்கையும் இல்லை. எனவே சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News