உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்க்கான காசோலையினை முனிராஜ் மனைவி சிக்கியிடம் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

Published On 2023-02-07 15:24 IST   |   Update On 2023-02-07 15:24:00 IST
  • உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 406 மனுக்கள் வரப்பெற்றன.
  • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது மனைவி சிக்கி என்பவருக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீ ர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 406 மனுக்கள் வரப்பெற்றன.

அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செங்கனூர் தரப்பு, ஜங்கமையனூர் கிராமத்தைச் சேர்ந்த (லேட்) முனிராஜ் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தமைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது மனைவி சிக்கி என்பவருக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வி.கே.சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜசேகரன், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  

Tags:    

Similar News