உள்ளூர் செய்திகள்
வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
- காலை எழுந்து பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.
- செல்வராஜ் (40) என்பவர் வாசீமின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் வாசீம் (வயது26). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை எழுந்து பார்த்தபோது திடீரென்று மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து வாசீம் பாகலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் பாகலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்த செல்வராஜ் (40) என்பவர் வாசீமின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர்.