- இளைஞர்கள் மூன்று பேரும் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- வாக்குவாதம் முற்றியத்தில் பெருமாளை கல்லால் தாக்கி உள்ளனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மூக்காகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது62). நேற்று இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தர பாண்டியன், சக்திவேல், விக்னேஷ், ஆகிய மூன்று வாலிபர்கள் நள்ளிரவு செல்போனில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதை பார்த்துக் கொண்டிருந்த பெருமாள் இரவு நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இதனால் இளைஞர்கள் மூன்று பேரும் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியத்தில் பெருமாளை கல்லால் தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த பெருமாள் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து மத்தூர் போலீசில் பெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் சவுந்தரபாண்டி யனை கைது செய்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள இரு வரையும் தேடி வருகின்றனர்.