உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து கூலித்தொழிலாளி சாவு
- கடன் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
- செல்வராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.
மாரண்டஅள்ளி,
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 40).கூலி வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி மலர் (35). இருவருக்கும் திருமணம் ஆகி 22 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் செல்வராஜ்க்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இநநிலையில் கடந்த 12-ம் தேதி செல்வராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்தார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.