உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து கூலித்தொழிலாளி சாவு

Published On 2023-05-11 09:45 GMT   |   Update On 2023-05-11 09:45 GMT
  • மனைவி இறந்ததால் குடிப்பழக்கம் அதிகம் ஏற்பட்டது.
  • மனவிரக்தியில் இருந்த சின்னராஜ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை அருகே உள்ள ஆலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 65). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி இறந்ததால் குடிப்பழக்கம் அதிகம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று மனவிரக்தியில் இருந்த சின்னராஜ் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சின்னராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News