உள்ளூர் செய்திகள்

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மாணவி உயிரிழப்பு- உறவினர்கள் சாலை மறியல்

Published On 2023-02-17 15:38 GMT   |   Update On 2023-02-17 15:38 GMT
  • தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
  • மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் போராட்டம்

சென்னை:

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நந்தினி என்பவரின் மகள் அபிநயா. 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு காதில் சீழ் வந்ததால், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் மூச்சுத் திணறல், நெஞ்சுவலி காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அபிநயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அபிநயாவுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News