உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

குமுளி அருகே கால்நடைகளை கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் தீவிரம்

Published On 2023-09-17 12:53 IST   |   Update On 2023-09-17 12:53:00 IST
  • குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பசுமாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
  • கண்காணிப்பு காமிரா மூலம் சிறுத்தை உலா வரும் நேரம், அதன் வழித்தடங்களை கண்டறிந்தனர்.

கூடலூர்:

கேரள மாநிலம் குமுளி அருகே வண்டிபெரியாறு மூங்கிலாறு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பசுமாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை அடித்து கொன்றதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் கண்காணிப்பு காமிரா பொருத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் சிறுத்தை உலா வரும் நேரம், அதன் வழித்தடங்களை கண்டறிந்தனர்.

குமுளி ரேஞ்சர் அணில்குமார் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு கால்நடைகளை அடித்து கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.

மீண்டும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வனப்பகுதியை யொட்டியுள்ள எஸ்டேட் மற்றும் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News