உள்ளூர் செய்திகள்

மரத்திலிருந்து விழுந்து விவசாயி பலி

Published On 2023-02-26 09:37 GMT   |   Update On 2023-02-26 09:37 GMT
  • எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
  • மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னச்சந்திரம் அருகேயுள்ள அவல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50).

விவசாயியான காளியப்பன் தனக்கு சொந்தமான மரத்தில் ஏறி புளியம்பழம் பறிக்க முயன்றார்.

அப்போது எதிர்பாரதவிதமாக தடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.இதில் படுகாயம் அடைந்த அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் எல்லப்பன் கொடுத்த புகாரின்பேரில் குருபரபள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல தருமபுரி மாவட்டம் எச். கோபிநாதம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (28) என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகேயுள்ள மல்லூரில் செல்போன் டவருக்கு குழிதோண்டும் பணியில் ஈடுபட்டார். குடிபோதையில் இருந்த சுரேஷ் அந்த குழிக்குள்ளேயே விழுந்து உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை முனுசாமி தந்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News