கோப்பு படம்
ஒட்டன்சத்திரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய கைதியை மடக்கி பிடித்த போலீசார்
- ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அைழத்துச்செல்லப்பட்ட வாலிபர் தப்பிச்சென்றார்.
- சாலையில் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் மடக்கிபிடித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அைழத்துச்செல்லப்பட்ட வாலிபர் தப்பிச்சென்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்தவர் முனியப்பன்(27). தும்பிச்சம்பட்டியை சேர்ந்த சபரிநாத் என்பவருடன் மதுபோதையில் மார்க்கெட் பைபாஸ் சாலையில் தகராறில் ஈடுபட்டார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் முனியப்பன் தாக்கியதில் சபரிநாத் காயமடைந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் முனியப்பனை ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச்சென்றனர். அப்போது அவர் நைசாக அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைதொடர்ந்து போலீசார் அவரை தீவிரமாக தேடினர். சாலையில் சுற்றித்திரிந்த அவரை போலீசார் மடக்கிபிடித்தனர்.