உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த நுழைவு வாயில் பகுதி சாலையை சீரமைக்க வேண்டும்

Published On 2023-05-16 15:14 IST   |   Update On 2023-05-16 15:14:00 IST
  • சாலையில் காங்கிரிட் கலவைகள் உடைந்து சிதைந்த நிலையில் பள்ளமாக உள்ளது.
  • காங்கிரீட்டால் அமைத்த தோரணம் சேதம் எற்படும் அபாயம் உள்ளது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிைலயம் கட்டி சில ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த பேருந்து நிலையத்திக்கு சூளகிரி சுற்றுபுறப்பகுதி கிராமங்களில் இருந்து மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வெளி மாநிலத்தவர் என 10 ஆயித்திற்கு மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த பேருந்து நிலையத்திற்க்கு ஒசூர்- கிருஷ்ணகிரி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு நுழைவாயில் தோரணம் உள்ளது.

அதன் அருகில் சாலையில் காங்கிரிட் கலவைகள் உடைந்து சிதைந்த நிலையில் பள்ளமாக உள்ளது. இதனால் பேருந்துகள் பள்ளத்தில் இறங்கி செல்வதால் அதிர்வு எற்படுகிறது. இதனால் அக்கம் பக்க சுவர் அதிர்கிறது.

இதனால் காங்கிரீட்டால் அமைத்த தோரணம் சேதம் எற்படும் அபாயம் உள்ளது. அதனால் பழுதான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

Similar News