உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2023-05-02 09:47 GMT   |   Update On 2023-05-02 09:47 GMT
  • நீர் தேங்கிய பகுதியில் காலை வைத்தவர் நீருக்குள் தவறி விழுந்து விட்டார்.
  • கிராம‌மக்கள் சுக்காம்பார் சாலையில் அமர்ந்து மறியல் செய்ய முயன்றனர்.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளி - கல்லணை சாலையில் அமைந்துள்ள கல்லணை அருகே சுக்காம்பார் கிராமம் கீழ்த் தெரு கோவிந்தராஜ் என்ற விவசாய கூலி தொழிலாளி மகன் சஞ்சு (வயது 11) இவர் கோவிலடி கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றிற்கு தனது நண்பர் ரிஷிக்குமரனுடன் சென்றுள்ளார்.

கொள்ளிடத்தில் நீர் தேங்கிய பகுதியில் காலை வைத்தவர் நீருக்குள் தவறி விழுந்து விட்டார்.

உடனே அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்வதற்குள் நீரில் மூழ்கிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அருகில் உள்ள இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றில் குதித்து தேடி சிறுவனின் உயிரற்ற உடலை மீட்டனர்.

மணல் அள்ளியதால் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால் சிறுவன் இறந்தாக கூறி கிராமமக்கள் சுக்காம்பார் சாலையில் அமர்ந்து சாலை மறியல் செய்ய முயன்றனர்.

உடனடியாக அங்கு வந்த தோகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளை சாலை மறியல் செய்யக்கூடாது என வலியுறுத்தி தகுந்த நட வடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.

இதை அடுத்து தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சிறுவன் பிரேதத்தைப் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News