உள்ளூர் செய்திகள்

ஆடி முதல் அமாவாசை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யப்பட்ட போது எடுத்த படம்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சில்வர் பீச் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

Published On 2023-07-17 14:50 IST   |   Update On 2023-07-17 14:50:00 IST
  • அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.
  • மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர்.

கடலூர்:

இறந்த மூதாதையர்க ளுக்கு தர்ப்பணம் செய்வ தற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தா லும், மாதம்தோறும் அமாவாசை யிலாவது தர்ப்பணம் செய்வது அவசியம். தை, ஆடி மற்றும் மகாளாய அமாவாசையன்று நமது முன்னோர் ஒட்டு மொத்தமாக பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நாளன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லதாகும். தர்ப்பணத்தின் போது எள், தண்ணீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றை பயன்படுத்துவர். இவற்றை பிதுர் தேவதைகள் முன்னோர்க ளுக்குக் கொண்டு சேர்த்துவிடுவர் என்கிறது சாஸ்திரம்.

இந்நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடுவதும், பிதுர் வழிபாடு செய்து அவர்களை வழியனுப்பி வைப்பதும், குடும்பம் செல்வச்செழிப்புடன் வாழவும், வாழையடி வாழையாய் தழைக்கவும் உதவும். இந்த நிலையில் ஆடி அமாவாசை அன்று இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் இறந்த பெற்றோர்கள் மற்றும் இறைவன் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம் . இந்த நிலையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இன்று ம் (திங்கட்கிழமை), வருகிற ஆகஸ்ட் மாதம் 16 -ந் தேதியும் அமாவாசை திதி வந்துள்ளது. இன்று வரக்கூடிய அமாவாசை திதியானது சூனிய திதியாகவும், வருகிற ஆகஸ்ட் மாதம் 16-ந் தேதி வரக்கூடிய அமாவாசை அன்று மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கலாம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்து வைரலாகி வந்தது.

இன்று காலைகடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் மிக குறைந்த அளவில் பொது மக்கள் நேரில் வந்தனர். பின்னர் கடலில் நீராடி சூரியனை வணங்கி தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர். ஆனால் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை, கடலூர் தென்பெண்ணை ஆறு நதிக்கரையில் தங்கள் மூதா தையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி செல்வார்கள். இதன் காரணமாக மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். ஆனால் இன்று வழக்கத்தை விட மிகக் குறைந்த அளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்து வந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News