உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் மாதர் சங்க கொடியேற்று விழா நடந்தது.

தஞ்சை புது ஆற்றின் இரு கரையிலும் மின்விளக்குகள் பொருத்த மாதர் சங்கம் வலியுறுத்தல்

Published On 2022-06-10 10:29 GMT   |   Update On 2022-06-10 10:29 GMT
  • இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையூறாக குடியிருப்புக்குமத்தியில் புதிதாக மதுபான கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது,
  • புதுஆற்று இரு கரையிலும் தேவையான அளவில் மிள்விளக்குகள் பொருத்த வேண்டும்

தஞ்சாவூர்:

தஞ்சை சாந்தபிள்ளை கேட் கல்லணைக்கால்வாய் மேல்கரையில் அனைத்தி ந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாதர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

இதற்கு கிளை தலைவர் அம்பிகா தலைமை தாங்கினார். செயலாளர் சரஸ்வதி, பொரு ளாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வி சங்க கொடியேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கும், குடியிருப்போர்களுக்கும் இடையூறாக குடியிருப்புக்குமத்தியில் புதிதாக மதுபான கடைகளை திறக்க அனுமதிக்க கூடாது, புதுஆற்று இரு கரையிலும் தேவையான அளவில் மிள்விளக்குகள் பொருத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட தலைவர் கலைச்செல்வி, மாநகர செயலாளர் வசந்தி, மாநகர தலைவர் புனிதா, மாநகர பொருளாளர் பைந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News