உள்ளூர் செய்திகள்

வீடுகளை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள்

Published On 2022-06-11 10:11 GMT   |   Update On 2022-06-11 10:11 GMT
மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி வழங்கியது.

திருவையாறு:

திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி நேற்று வழங்கியது. இந்நிகழ்ச்சிக்கு துரை.சந்திரசேகரன் எம்எல்.ஏ. தலைமை வகித்து புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

எய்டு இந்தியாதொண்டு நிறுவனத்தின் இணைச்செயலாளர் முனைவர் தாமோ தரன் முன்னிலை வகித்தார்.

இதில் திருவையாறு பேரூராட்சி துணைத்த லைவர் நாகராஜன்,ஒன்றியக் கவுன்சிலர்சிவஞானம், ஊராட்சி மன்றத்தலை வர்கள் மரூர் மணிகண்டன், சாத்தனூர் அகிலா சாமிநா தன், மகாராஜபுரம்சுஜாதா பாஸ்கர், எய்டு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News