உள்ளூர் செய்திகள்

ஆஞ்சநேயர் கோவில் சம்வத்சராபிஷேகம்

Published On 2022-06-05 09:54 GMT   |   Update On 2022-06-05 09:54 GMT
  • திருவையாறு ஆஞ்சநேயர் கோவிலில் சம்வத்சராபிஷேகம் நடந்தது.
  • மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

திருவையாறு:

திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலின் 7 ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது. மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

இதனைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா ஆராதனை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் வருசாபிஷேகம் தரிசனம் செய்து அருள் பெற்றார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

இரவு பல வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு துளசி தல அர்ச்சனை செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் வீதிஉலா வந்தருளினார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில் டிரஸ்டி குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News