உள்ளூர் செய்திகள்

தளி, கெலமங்கலத்தில் வட மாநில வாலிபர்-விவசாயி தற்கொலை

Published On 2023-01-03 09:33 GMT   |   Update On 2023-01-03 09:33 GMT
  • அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
  • இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்தவர் கணேஷ்மல். இவர் தற்போது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேயுள்ள உளிபெண்டா பகுதியில் தாகி வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் அக்ஸா (வயது 17). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அக்ஸா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ்மல் கொடுத்த புகாரின் பேரில் தளி போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல தேன்கனி கோட்டை அருகேயுள்ள டி. புதூர் பகுதியை சேர்ந்த விவசாயி காளியப்பன் என்பவர் குடிபழக்கத்தை வீட்டில் கண்டித்ததால் மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகள் மோனிஷா தந்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News