உள்ளூர் செய்திகள்
தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
- இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் கைலாச நாதர் கோவில் தைப் பூச தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. வருகிற 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடி கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டளைதாரர்களுக்கு என நிர்ணயிக்கப்பட்ட வாகனத்தில் சாமி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து 9-ந் தேதி தெப்பத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த கொடியேற்ற விழாவில் கோவில் தக்கார் திருஞன சம்பந்தர், கோவில் செயல் அலுவலர் புனித
ராஜ், உமாபதி குருசாமி கள்,நான்கு கோடி மகா ஜனங்கள், மிராஸ்தா ரர்கள், கட்டளைதாரர்கள், கோவில் பணியாளர்கள், அனைத்து ஊர் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.