உள்ளூர் செய்திகள்

சிறப்பு மலர் அலங்காரத்தில் காலபைரவர்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

Published On 2022-10-18 14:57 IST   |   Update On 2022-10-18 14:57:00 IST
  • அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News