உள்ளூர் செய்திகள்
இருசக்கர வாகனம் மோதி வாலிபர் பலி
- மதகொண்டபள்ளி சாலை அருகே எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதி கொண்டனர்.
- உதய்குமார் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள பெள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் மதகொண்டப்பள்ளி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வேடம்பட்டி கிராமத்தை சேர்ந்த உதய குமார் (19) என்பவர் இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் மதகொண்டபள்ளி சாலை அருகே எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதி கொண்டனர். இதில் உதய்குமார் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சாைல வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த வெங்கடேசை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.