உள்ளூர் செய்திகள்

ஏர்வாடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி-நண்பர் படுகாயம்

Published On 2022-07-17 09:09 GMT   |   Update On 2022-07-17 09:09 GMT
  • நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர்.
  • தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

நெல்லை:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி பெரியார்நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 31). இவரும், இவரது நண்பரும் நாகர்கோவில் அருகே உள்ள கோணத்தில் வேலை பார்த்து வந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்தது

நேற்று இரவு 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டு உள்ளனர். நள்ளிரவில் நாங்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் மேலூர் அருகே நான்குவழிச்சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதில் வினோத்குமாரும், அவரது நண்பரும் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் 2 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பலி

ஆனால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வினோத்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தின்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்றும் அவர்கள் மீது மோதிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏர்வாடி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News