உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- ரமேஷ் (வயது36) இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு மகன் ரமேஷ் (வயது36) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று நல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்பொழுது கள்ளக்குறிச்சியில் இருந்து கச்சிராயபாளையம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ரமேஷ் மீது பயங்கரமாக மோதியது இதில் நெஞ்சு பகுதி மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரமேஷின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் விபத்து ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்து கச்சிராயபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.