உள்ளூர் செய்திகள்
- பி.சி.நாசம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார்.
- சம்பவ இடத்திலேயே தாமோதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது36). இவர் இருசக்கர வாகனத்தில் சிங்காரபேட்டை- ஊத்தங்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பி.சி.நாசம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே தாமோதரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சிங்கார பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.