உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணத்தில் வாலிபர் தற்கொலை
- வீட்டில் உள்ளவர்கள் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருபெண்னை திருமணம் செய்து வைத்ததால் மனவேதனையில் இருந்துள்ளார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவசங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் சிவசங்கர் (வயது24). இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ள நிலையில் இவர் வேறு ஒருபெண்னை காதலித்துள்ளார்.
ஆனால் வீட்டில் உள்ளவர்கள் விருப்பத்திற்கு மாறாக வேறு ஒருபெண்னை திருமணம் செய்து வைத்ததால் மனவேதனையில் இருந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவசங்கர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மாமா ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.